
கோவில் என்பதா, கோயில் என்பதா?
ஒரு ஆலயத்தை கோவில் என்போரும் உண்டு; கோயில் என்போரும் உண்டு. ஆனால் கோயில் என்ற பதம், ‘கோ’ உறைந்திருக்கும் ‘இல்’ என்று பொருள்படுவதாகவேtt பலரும் சொல்வார்கள். அதாவது கோ என்ற மன்னன் குடியிருக்கும் இல், கோயில். தன் மக்களை ஆள்பவன், அவர்கள் நலம் காப்பவன் மன்னன். ஆனால் அகில உலகத்தையும் படைத்து, காத்து அருளும் இறைவனும் மன்னன் போன்றவன்தானே. ஆகவேதான் கோ என்றால் இறை என்றும் ஒtரு பொருள் உண்டு. இந்த இறைவன் உறையும் இல்தான் கோயில்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாட்சியும் ஆன்மிகமும் ஒன்றையொன்று சார்ந்தேதான் வளர்ந்துள்ளன. எந்தப் பகுதி மன்னராக இருந்தாலும் அவர் தம் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் எந்தச் செயலிலும் ஈடுபடுவார். அன்றாடக் கடமையிலிருந்து, பகைவரைத் தடுக்கும் அல்லது அவர் மீது போர் தொடுக்கும் பெரிய பொறுப்புவரை அவர் இறையருளின் ஆதரவைப் பெறத் தவறியதேயில்லை.
இந்த வகையில் அரசர்கள் தம் இறைவனாருக்கு பிரமாண்டமான கோயில்களை எழுப்பினார்கள். அதன் மதில் சுவர் நெடிதுயர்ந்தது. வானோக்கி நிமிர்ந்த கோபுரங்களுக்குள்ளேயே ஏறி, உச்சிவரை செல்லும் வசதி இருந்தது. கோயிலுக்குள் இறைவன், மன்னனின் விருப்பத்திற்கேற்ற பிற தெய்வங்கள் சந்நதிகளோடு, நெல் சேமித்து வைக்கும் பெரிய மண்டபங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுவான இந்த அமைப்பு, எதிரி படையெடுப்பிலிருந்து தன் மக்களைக் காப்பதற்கும் எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் ஒரு மன்னனுக்கு ஏதுவாக இருந்தது. ஒருவேளை போர் நாள் கணக்கில் நீடிக்குமானால், உள்ளேயே இருக்கும் நெல் சேமிப்பு கிடங்குகள் மக்களின் பசி போக்கத் தயாராக இருந்தன. தன் மக்கள் கோயிலுக்குள் வந்து இறைவனை வணங்குவதோடு, சொற்பொழிவுகளைக் கேட்டு மனத் தூய்மை பெறவும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் உற்சாகம் பெறவும் வசதியாக கோயிலின் உள்ளமைப்பை உருவாக்கினான் மன்னன்.
மன்னன் கோயிலை நிர்மாணித்ததில் சுயநலத்தைவிட, பொதுநலத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஓர் உதாரணம்: கோயில் கட்ட தேவைப்படும் மணலை அருகிலேயே, பூமியிலிருந்து தோண்டி எடுத்துக் கொண்டான். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோண்டி, மணலை சேகரித்து, கோயிலை உருவாக்கிய மன்னன், தோண்டப்பட்டதால் பெரும் பள்ளமாகிவிட்டிருந்த பகுதியை, அப்படியே விட்டுவிடாமல், அதில் நீர் பாய்ச்சி, குளமாக்கி, மக்கள் குடிநீர், குளிநீர் வசதிகள் பெறவும் வழிவகுத்தான். நாளாவட்டத்தில் அவனுடைய பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் மழையும் பொழிந்து குளத்தை நீராலும் மக்கள் மனதை சந்தோஷத்தாலும் நிரந்தரமாக நிரப்பியது.
இப்படி பொது கைங்கர்யம் செய்யும் மன்னனின் சரித்திரம் பெரும்பாலும் ஏதேனும் கல்வெட்டுகளாலோ, அதே கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மன்னனின் சிலையாலோ அறியப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு கோயில்தான், காஞ்சிபுரத்திலுள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம்.
இந்தப் பெருமாளுக்குப் பெருமை சேர்த்தவன் பல்லவ மன்னன். இறையுணர்வை மதித்ததோடு, அதை மக்களுக்கும் பரப்பியதோடு, அவர்களுடைய நல்வாழ்வுக்கு நல்லதோர் காவலனாக இருந்த அரசனின் வம்சம் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பரந்தாமனுக்கும் அக்கறை இருந்தது.
அதனால்தான் பல்லவ சாம்ராஜ்யத்தில் ஒரு குறிப்பிட்ட தலைமுறையோடு அந்த வம்சமே முற்றுப்பெறப் போகிறது என்பதை உணர்ந்த மாதவன், அந்த மன்னனுடைய ஏக்கத்தைப் போக்கத் தயாராக இருந்தான். இதற்காக பாரத்வாஜ முனிவரைக் கருவியாக்கிக் கொண்டான். அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அந்த தவத்தை ஒரு கந்தர்வப் பெண் மூலம் கலைக்க வைத்தான். தவம் கலைந்த முனிவர் கோபம் கொள்ளாமல் காமம் கொண்டதில், கந்தர்வப் பெண் அவருக்கு ஓர் ஆண் மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு மறைந்தாள். தனிமை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த முனிவருக்கு இப்போது தம் குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு!
அவருடைய கவலையைத் தீர்க்கும் வகையாக மஹாவிஷ்ணுவும் மஹாலட்சுமியும் வேடர் உருக்கொண்டு, அங்கே வந்து, அவரிடமிருந்து அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு, உரிய காலத்துக்காகக் காத்திருந்தார்கள். மழலைப்பேறு வேண்டி தலந்தோறும் தீர்த்த யாத்திரை செய்து வந்த பல்லவ மன்னன், ஒரு காட்டில் அந்த வேடுவத் தம்பதியிடமிருந்து குழந்தையைப் பெற்றான். அதற்கு பரமேஸ்வரவர்மன் என்று பெயர் சூட்டினான். குலம் தழைக்க வந்த குழவியை சீராட்டிப் பாராட்டி வளர்த்தான்.
இந்தப் பரமேஸ்வரவர்மன் திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டான். அவனுக்கு பெருமாள் 18 கலைகளை போதித்தார். அவ்வாறு அவர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் போதித்த அந்தக் கலைகளில் பெரிய தேர்ச்சி பெற்ற மன்னன், அதற்கு நன்றிக் கடனாக தான் பெருமாளை தரிசித்த கோலங்களிலேயே அவருக்கு அர்ச்சாவதாரங்கள் உருவாக்கி, கோயிலையும் நிர்மாணித்தான். அவர்தான் வைகுண்ட நாதன் என்ற, பரமேஸ்வரன். கோயில் அமைந்த தலம் பரமேஸ்வர விண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்றாயிற்று.
பல்லவ சிற்பக் கலையின் சிறப்பம்சங்களை கோயிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் காண முடிகிறது. மன்னன் தரிசித்த பெருமாளை அதே அற்புத கோலங்களில் நாமும் காண முடிகிறது. மூன்றடுக்குகள் கொண்ட அழகிய கோயில் இது. கீழ் அடுக்கில் பெருமாள் வீற்றிருந்த நிலையில் சேவை சாதிக்கிறார்; நடு அடுக்கில் அனந்த சயனராகவும், மேல் அடுக்கில் நின்ற கோலத்திலும் அருள்மழை பொழிகிறார்.
இந்த மூன்று சிலைகளும் வித்தியாசமானவை. அதாவது கீழ், நடு அடுக்குகளில் உள்ள சிலைகள் கற்களாலும், மேல் அடுக்கில் உள்ளது சுதை சிற்பமாகவும் காணப்படுகின்றன. பல்லவர் காலத்திலேயே பெருமழை அழைத்து வந்த பேரிடி காரணமாக மேல் அடுக்கில் நின்றிருந்த பெருமாள் சிலை சிதிலமடைந்ததாகவும் அதற்கு மாற்றாக சுதை சிற்பம் அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஐரம்மத தீர்த்தம் என்ற திருக்குளம் வறண்டு காணப்படுகிறது.
ஆனால், கோயிலினுள் அழகிய, மணம் கமழும் நந்தவனம் பசுமையாய் உயிர்த்திருக்கிறது. பச்சைப் புல்வெளி கோயிலைச் சுற்றி அமைந்து அந்த பச்சைமா மலைபோல் மேனியனுக்கு வந்தனம் சொல்லுகிறது. அரசும் வேம்பும் பிணைந்து உயர்ந்து நிற்கின்றன. அதனடியில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் சிறு உருவினராகக் காட்சி தருகிறார். அவருக்கு அருகே பல நாகர்கள், மஞ்சள்&குங்குமப் பொட்டுகளில் பொலிகிறார்கள்.
கோயிலினுள் நுழைந்தால் ஒரு கணம், சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்குதான் வந்திருக்கிறோமோ என்ற பிரமிப்பு ஐயம் எழுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்களில் வரிசையாக சுதை சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பமும் பல்லவ சரித்திரத்தை ஆன்மிகப் பின்னணியோடு விவரிக்கிறது. பல்லவ கலைத் திறனைப் பறைசாற்றுவதுபோல, இத்தலத்திலுள்ள மூலவர், அவரைச் சுற்றியுள்ள பிராகாரம், அவற்றைத் தாங்கியிருக்கும் தூண்கள் எல்லாம் ஒரே பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை என்றறியும்போது பிரமிப்பு மேலும் கூடுகிறது.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்த வைகுண்டநாதப் பெருமாளின் ஆசியுடனேயே நிறைவேற்றி வந்திருக்கிறான். அன்றாடக் கடமை முதல் போர் தொடுப்பதுவரை எல்லாம் அவரது ஆசித் துணையுடன்தான். அந்த வகையில் அவன் பாண்டிய மன்னனை வென்றதை திருமங்கையாழ்வார்,
தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் & பர
மேச்சுர விண்ணக ரமதுவே
&என்று சிறப்பிக்கிறார்.
பரமேஸ்வரவர்மனின் பிறப்பு, அவனுக்குப் பெருமாள் அருங்கலைகளையும் சாஸ்திரங்களையும் போதித்த சம்பவங்களை உள் பிராகாரத்தில் சிற்பங்களாகப் பார்த்து, தல புராணத்தை, காட்சி வடிவமாகவே காண முடிகிறது.
இந்த சிற்பங்களையும், அவற்றின் தொன்மை, அவை விவரிக்கும் சரித்திர, புராண சம்பவங்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்களில் டெனிஸ் ஹட்ஸன் என்ற ஆங்கிலேயரும் ஒருவர். புற்று நோயால் சுமார் ஒன்பது வருடங்கள் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதையும் பொருட்படுத்தாமல், இதே கோயிலில் பல ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் அந்த ஆராய்ச்சியின் பலனாக 600 பக்கங்கள் கொண்ட பல்லவா ஹிஸ்டரி & வைகுண்ட பெருமாள் என்ற புத்தகத்தை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 1972 முதல் 2002வரை 30 ஆண்டுகளை அவர் இந்த ஆராய்ச்சியில் செலவிட்டாராம். அந்தப் புத்தகத்தில் பரமேச்சுர விண்ணகரம் என்ற இந்தக் கோயில் மட்டுமல்லாமல், சற்றுத் தொலைவில் இருக்கும் கயிலாயநாதர் கோயில் பற்றிய விவரங்களும் அடங்கியிருக்கின்றன.
கோயிலின் மேல் தளத்தில் மேலும் சில புராண சம்பவங்கள் சிற்பமாக நின்று கதை சொல்கின்றன. மூன்று அவதாரங்கள் நிறைவேற்றிய மூன்று வதங்கள், இரண்யனைக் கிழித்துப் போட்ட நரசிம்மர், நரகாசுரனை வதைத்த கிருஷ்ணர், வாலியைக் கொன்ற ராமர் என்று மூன்று சம்பவங்களும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கும் ஒரு சிலை இங்கே உள்ளது. இத்தலத்திற்கு அவர் ஆற்றிய பணிகளின் அங்கீகாரம் அது. இரண்டு மண்டபங்கள் இந்தக் கோயிலில் தனித்துத் தெரிகின்றன. இப்போது வெறும் மண்டபங்களாக விளங்கும் அவை, பல்லவர் காலத்தில் நடன நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்று மன்னர் குடும்பத்தாரையும் குடிமக்களையும் மகிழ்வித்திருக்கின்றன.
மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டநாதப் பெருமாளே இங்கே கருவறை தெய்வம். இவர் பரமபதநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். தன்னைத் தொழுவோருக்கு வைகுண்ட சொர்க்கத்தை இம்மையிலேயே காட்டும் இந்த அருளாளர், அழகாகப் புன்னகைக்கிறார். அந்த மெல்லியப் புன்னகையே எல்லா துயரங்களையும் விரட்டி விடுகிறது.
தாயார் வைகுந்தவல்லி. பெயரளவில் வைகுந்தத்தின் அரசியாக இருந்தாலும் பிரபஞ்சத்தையே ஆட்சி செய்யும் அற்புதத் தாய் இவர். கணவரது பராமரிப்பில் யாரையும் விட்டுவிடக் கூடாதே என்ற தாய்மைப் பரிதவிப்பு அந்தக் கண்களில் தெரிகிறது. அப்படியே விட்டுப் போவதுபோலத் தோன்றினாலும் உடனே எடுத்துச் சொல்லி, எந்த உயிரும் எந்தத் துன்பமும் அடைந்துவிடாதபடி சாலப் பரிந்து பாதுகாக்கும் கருணையும் கூடவே தெரிகிறது.
இந்தக் கோயிலிலிருந்து மாமல்லபுரத்துக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாகச் சொல்கிறார்கள். குதிரைகள் பூட்டிய தேரில் மன்னன் இவ்விரு தலங்களுக்கும் இந்தப் பாதை வழியாகச் சென்று வருவான் என்றும் அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது. அதேபோல இந்தக் கோயிலுக்கும் கயிலாயநாதர் கோயிலுக்கும் இடையேயும் சுரங்கப் பாதை இருந்திருக்கிறது.
இவை மட்டுமல்ல மூலவர் சந்நதிக்கும், முன்மண்டபத்துக்கும் இடையேயும் ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கிறது. இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் அதனைத் தோண்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஊர் பொதுமக்களும் இந்த இறைவன் மீது அன்பு கொண்டிருந்த அலி முகம்மது கான் என்ற முகமதியப் பெரியவரும் அதை அனுமதிக்க விரும்பவில்லை. உடனே சுரங்கப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் அந்த வாசலை மூடியபடி படிகள் எழுப்பி, மூலவர் சந்நதிக்குப் போகும் வழியாக மாற்றிவிட்டார்கள். அந்தக் கல் பாலத்தை இன்றும் காணலாம். படிகளைப் பார்த்த ஆங்கிலேயர், பூமிக்குக் கீழிறங்கிச் செல்ல முடியும் என்று நினைத்தால், மேலே படியேறி பெருமாளை சேவிக்க வேண்டியிருக்கிறதே என்று ஏமாற்றமடைந்தனர்.
பெருமாளை தரிசித்த பின்னர், பிரசாதமாக அவல்&கல்கண்டு தருகிறார்கள். அதாவது குசேலனாக வருபவர்களும், அவல் போன்ற எளிய நிவேதனம் அளித்தாலும், அதனுடன், இனிமையான கல்கண்டு என்ற வளமான வாழ்வை இந்த வைகுண்டநாதப் பெருமாள் அருள்வான் என்பது உட்பொருள்
ஒரு ஆலயத்தை கோவில் என்போரும் உண்டு; கோயில் என்போரும் உண்டு. ஆனால் கோயில் என்ற பதம், ‘கோ’ உறைந்திருக்கும் ‘இல்’ என்று பொருள்படுவதாகவேtt பலரும் சொல்வார்கள். அதாவது கோ என்ற மன்னன் குடியிருக்கும் இல், கோயில். தன் மக்களை ஆள்பவன், அவர்கள் நலம் காப்பவன் மன்னன். ஆனால் அகில உலகத்தையும் படைத்து, காத்து அருளும் இறைவனும் மன்னன் போன்றவன்தானே. ஆகவேதான் கோ என்றால் இறை என்றும் ஒtரு பொருள் உண்டு. இந்த இறைவன் உறையும் இல்தான் கோயில்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாட்சியும் ஆன்மிகமும் ஒன்றையொன்று சார்ந்தேதான் வளர்ந்துள்ளன. எந்தப் பகுதி மன்னராக இருந்தாலும் அவர் தம் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் எந்தச் செயலிலும் ஈடுபடுவார். அன்றாடக் கடமையிலிருந்து, பகைவரைத் தடுக்கும் அல்லது அவர் மீது போர் தொடுக்கும் பெரிய பொறுப்புவரை அவர் இறையருளின் ஆதரவைப் பெறத் தவறியதேயில்லை.
இந்த வகையில் அரசர்கள் தம் இறைவனாருக்கு பிரமாண்டமான கோயில்களை எழுப்பினார்கள். அதன் மதில் சுவர் நெடிதுயர்ந்தது. வானோக்கி நிமிர்ந்த கோபுரங்களுக்குள்ளேயே ஏறி, உச்சிவரை செல்லும் வசதி இருந்தது. கோயிலுக்குள் இறைவன், மன்னனின் விருப்பத்திற்கேற்ற பிற தெய்வங்கள் சந்நதிகளோடு, நெல் சேமித்து வைக்கும் பெரிய மண்டபங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுவான இந்த அமைப்பு, எதிரி படையெடுப்பிலிருந்து தன் மக்களைக் காப்பதற்கும் எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் ஒரு மன்னனுக்கு ஏதுவாக இருந்தது. ஒருவேளை போர் நாள் கணக்கில் நீடிக்குமானால், உள்ளேயே இருக்கும் நெல் சேமிப்பு கிடங்குகள் மக்களின் பசி போக்கத் தயாராக இருந்தன. தன் மக்கள் கோயிலுக்குள் வந்து இறைவனை வணங்குவதோடு, சொற்பொழிவுகளைக் கேட்டு மனத் தூய்மை பெறவும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் உற்சாகம் பெறவும் வசதியாக கோயிலின் உள்ளமைப்பை உருவாக்கினான் மன்னன்.
மன்னன் கோயிலை நிர்மாணித்ததில் சுயநலத்தைவிட, பொதுநலத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஓர் உதாரணம்: கோயில் கட்ட தேவைப்படும் மணலை அருகிலேயே, பூமியிலிருந்து தோண்டி எடுத்துக் கொண்டான். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோண்டி, மணலை சேகரித்து, கோயிலை உருவாக்கிய மன்னன், தோண்டப்பட்டதால் பெரும் பள்ளமாகிவிட்டிருந்த பகுதியை, அப்படியே விட்டுவிடாமல், அதில் நீர் பாய்ச்சி, குளமாக்கி, மக்கள் குடிநீர், குளிநீர் வசதிகள் பெறவும் வழிவகுத்தான். நாளாவட்டத்தில் அவனுடைய பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் மழையும் பொழிந்து குளத்தை நீராலும் மக்கள் மனதை சந்தோஷத்தாலும் நிரந்தரமாக நிரப்பியது.
இப்படி பொது கைங்கர்யம் செய்யும் மன்னனின் சரித்திரம் பெரும்பாலும் ஏதேனும் கல்வெட்டுகளாலோ, அதே கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மன்னனின் சிலையாலோ அறியப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு கோயில்தான், காஞ்சிபுரத்திலுள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம்.
இந்தப் பெருமாளுக்குப் பெருமை சேர்த்தவன் பல்லவ மன்னன். இறையுணர்வை மதித்ததோடு, அதை மக்களுக்கும் பரப்பியதோடு, அவர்களுடைய நல்வாழ்வுக்கு நல்லதோர் காவலனாக இருந்த அரசனின் வம்சம் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பரந்தாமனுக்கும் அக்கறை இருந்தது.
அதனால்தான் பல்லவ சாம்ராஜ்யத்தில் ஒரு குறிப்பிட்ட தலைமுறையோடு அந்த வம்சமே முற்றுப்பெறப் போகிறது என்பதை உணர்ந்த மாதவன், அந்த மன்னனுடைய ஏக்கத்தைப் போக்கத் தயாராக இருந்தான். இதற்காக பாரத்வாஜ முனிவரைக் கருவியாக்கிக் கொண்டான். அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அந்த தவத்தை ஒரு கந்தர்வப் பெண் மூலம் கலைக்க வைத்தான். தவம் கலைந்த முனிவர் கோபம் கொள்ளாமல் காமம் கொண்டதில், கந்தர்வப் பெண் அவருக்கு ஓர் ஆண் மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு மறைந்தாள். தனிமை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த முனிவருக்கு இப்போது தம் குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு!
அவருடைய கவலையைத் தீர்க்கும் வகையாக மஹாவிஷ்ணுவும் மஹாலட்சுமியும் வேடர் உருக்கொண்டு, அங்கே வந்து, அவரிடமிருந்து அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு, உரிய காலத்துக்காகக் காத்திருந்தார்கள். மழலைப்பேறு வேண்டி தலந்தோறும் தீர்த்த யாத்திரை செய்து வந்த பல்லவ மன்னன், ஒரு காட்டில் அந்த வேடுவத் தம்பதியிடமிருந்து குழந்தையைப் பெற்றான். அதற்கு பரமேஸ்வரவர்மன் என்று பெயர் சூட்டினான். குலம் தழைக்க வந்த குழவியை சீராட்டிப் பாராட்டி வளர்த்தான்.
இந்தப் பரமேஸ்வரவர்மன் திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டான். அவனுக்கு பெருமாள் 18 கலைகளை போதித்தார். அவ்வாறு அவர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் போதித்த அந்தக் கலைகளில் பெரிய தேர்ச்சி பெற்ற மன்னன், அதற்கு நன்றிக் கடனாக தான் பெருமாளை தரிசித்த கோலங்களிலேயே அவருக்கு அர்ச்சாவதாரங்கள் உருவாக்கி, கோயிலையும் நிர்மாணித்தான். அவர்தான் வைகுண்ட நாதன் என்ற, பரமேஸ்வரன். கோயில் அமைந்த தலம் பரமேஸ்வர விண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்றாயிற்று.
பல்லவ சிற்பக் கலையின் சிறப்பம்சங்களை கோயிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் காண முடிகிறது. மன்னன் தரிசித்த பெருமாளை அதே அற்புத கோலங்களில் நாமும் காண முடிகிறது. மூன்றடுக்குகள் கொண்ட அழகிய கோயில் இது. கீழ் அடுக்கில் பெருமாள் வீற்றிருந்த நிலையில் சேவை சாதிக்கிறார்; நடு அடுக்கில் அனந்த சயனராகவும், மேல் அடுக்கில் நின்ற கோலத்திலும் அருள்மழை பொழிகிறார்.
இந்த மூன்று சிலைகளும் வித்தியாசமானவை. அதாவது கீழ், நடு அடுக்குகளில் உள்ள சிலைகள் கற்களாலும், மேல் அடுக்கில் உள்ளது சுதை சிற்பமாகவும் காணப்படுகின்றன. பல்லவர் காலத்திலேயே பெருமழை அழைத்து வந்த பேரிடி காரணமாக மேல் அடுக்கில் நின்றிருந்த பெருமாள் சிலை சிதிலமடைந்ததாகவும் அதற்கு மாற்றாக சுதை சிற்பம் அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஐரம்மத தீர்த்தம் என்ற திருக்குளம் வறண்டு காணப்படுகிறது.
ஆனால், கோயிலினுள் அழகிய, மணம் கமழும் நந்தவனம் பசுமையாய் உயிர்த்திருக்கிறது. பச்சைப் புல்வெளி கோயிலைச் சுற்றி அமைந்து அந்த பச்சைமா மலைபோல் மேனியனுக்கு வந்தனம் சொல்லுகிறது. அரசும் வேம்பும் பிணைந்து உயர்ந்து நிற்கின்றன. அதனடியில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் சிறு உருவினராகக் காட்சி தருகிறார். அவருக்கு அருகே பல நாகர்கள், மஞ்சள்&குங்குமப் பொட்டுகளில் பொலிகிறார்கள்.
கோயிலினுள் நுழைந்தால் ஒரு கணம், சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்குதான் வந்திருக்கிறோமோ என்ற பிரமிப்பு ஐயம் எழுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்களில் வரிசையாக சுதை சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பமும் பல்லவ சரித்திரத்தை ஆன்மிகப் பின்னணியோடு விவரிக்கிறது. பல்லவ கலைத் திறனைப் பறைசாற்றுவதுபோல, இத்தலத்திலுள்ள மூலவர், அவரைச் சுற்றியுள்ள பிராகாரம், அவற்றைத் தாங்கியிருக்கும் தூண்கள் எல்லாம் ஒரே பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை என்றறியும்போது பிரமிப்பு மேலும் கூடுகிறது.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்த வைகுண்டநாதப் பெருமாளின் ஆசியுடனேயே நிறைவேற்றி வந்திருக்கிறான். அன்றாடக் கடமை முதல் போர் தொடுப்பதுவரை எல்லாம் அவரது ஆசித் துணையுடன்தான். அந்த வகையில் அவன் பாண்டிய மன்னனை வென்றதை திருமங்கையாழ்வார்,
தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் & பர
மேச்சுர விண்ணக ரமதுவே
&என்று சிறப்பிக்கிறார்.
பரமேஸ்வரவர்மனின் பிறப்பு, அவனுக்குப் பெருமாள் அருங்கலைகளையும் சாஸ்திரங்களையும் போதித்த சம்பவங்களை உள் பிராகாரத்தில் சிற்பங்களாகப் பார்த்து, தல புராணத்தை, காட்சி வடிவமாகவே காண முடிகிறது.
இந்த சிற்பங்களையும், அவற்றின் தொன்மை, அவை விவரிக்கும் சரித்திர, புராண சம்பவங்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்களில் டெனிஸ் ஹட்ஸன் என்ற ஆங்கிலேயரும் ஒருவர். புற்று நோயால் சுமார் ஒன்பது வருடங்கள் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதையும் பொருட்படுத்தாமல், இதே கோயிலில் பல ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் அந்த ஆராய்ச்சியின் பலனாக 600 பக்கங்கள் கொண்ட பல்லவா ஹிஸ்டரி & வைகுண்ட பெருமாள் என்ற புத்தகத்தை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 1972 முதல் 2002வரை 30 ஆண்டுகளை அவர் இந்த ஆராய்ச்சியில் செலவிட்டாராம். அந்தப் புத்தகத்தில் பரமேச்சுர விண்ணகரம் என்ற இந்தக் கோயில் மட்டுமல்லாமல், சற்றுத் தொலைவில் இருக்கும் கயிலாயநாதர் கோயில் பற்றிய விவரங்களும் அடங்கியிருக்கின்றன.
கோயிலின் மேல் தளத்தில் மேலும் சில புராண சம்பவங்கள் சிற்பமாக நின்று கதை சொல்கின்றன. மூன்று அவதாரங்கள் நிறைவேற்றிய மூன்று வதங்கள், இரண்யனைக் கிழித்துப் போட்ட நரசிம்மர், நரகாசுரனை வதைத்த கிருஷ்ணர், வாலியைக் கொன்ற ராமர் என்று மூன்று சம்பவங்களும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கும் ஒரு சிலை இங்கே உள்ளது. இத்தலத்திற்கு அவர் ஆற்றிய பணிகளின் அங்கீகாரம் அது. இரண்டு மண்டபங்கள் இந்தக் கோயிலில் தனித்துத் தெரிகின்றன. இப்போது வெறும் மண்டபங்களாக விளங்கும் அவை, பல்லவர் காலத்தில் நடன நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்று மன்னர் குடும்பத்தாரையும் குடிமக்களையும் மகிழ்வித்திருக்கின்றன.
மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டநாதப் பெருமாளே இங்கே கருவறை தெய்வம். இவர் பரமபதநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். தன்னைத் தொழுவோருக்கு வைகுண்ட சொர்க்கத்தை இம்மையிலேயே காட்டும் இந்த அருளாளர், அழகாகப் புன்னகைக்கிறார். அந்த மெல்லியப் புன்னகையே எல்லா துயரங்களையும் விரட்டி விடுகிறது.
தாயார் வைகுந்தவல்லி. பெயரளவில் வைகுந்தத்தின் அரசியாக இருந்தாலும் பிரபஞ்சத்தையே ஆட்சி செய்யும் அற்புதத் தாய் இவர். கணவரது பராமரிப்பில் யாரையும் விட்டுவிடக் கூடாதே என்ற தாய்மைப் பரிதவிப்பு அந்தக் கண்களில் தெரிகிறது. அப்படியே விட்டுப் போவதுபோலத் தோன்றினாலும் உடனே எடுத்துச் சொல்லி, எந்த உயிரும் எந்தத் துன்பமும் அடைந்துவிடாதபடி சாலப் பரிந்து பாதுகாக்கும் கருணையும் கூடவே தெரிகிறது.
இந்தக் கோயிலிலிருந்து மாமல்லபுரத்துக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாகச் சொல்கிறார்கள். குதிரைகள் பூட்டிய தேரில் மன்னன் இவ்விரு தலங்களுக்கும் இந்தப் பாதை வழியாகச் சென்று வருவான் என்றும் அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது. அதேபோல இந்தக் கோயிலுக்கும் கயிலாயநாதர் கோயிலுக்கும் இடையேயும் சுரங்கப் பாதை இருந்திருக்கிறது.
இவை மட்டுமல்ல மூலவர் சந்நதிக்கும், முன்மண்டபத்துக்கும் இடையேயும் ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கிறது. இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் அதனைத் தோண்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஊர் பொதுமக்களும் இந்த இறைவன் மீது அன்பு கொண்டிருந்த அலி முகம்மது கான் என்ற முகமதியப் பெரியவரும் அதை அனுமதிக்க விரும்பவில்லை. உடனே சுரங்கப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் அந்த வாசலை மூடியபடி படிகள் எழுப்பி, மூலவர் சந்நதிக்குப் போகும் வழியாக மாற்றிவிட்டார்கள். அந்தக் கல் பாலத்தை இன்றும் காணலாம். படிகளைப் பார்த்த ஆங்கிலேயர், பூமிக்குக் கீழிறங்கிச் செல்ல முடியும் என்று நினைத்தால், மேலே படியேறி பெருமாளை சேவிக்க வேண்டியிருக்கிறதே என்று ஏமாற்றமடைந்தனர்.
பெருமாளை தரிசித்த பின்னர், பிரசாதமாக அவல்&கல்கண்டு தருகிறார்கள். அதாவது குசேலனாக வருபவர்களும், அவல் போன்ற எளிய நிவேதனம் அளித்தாலும், அதனுடன், இனிமையான கல்கண்டு என்ற வளமான வாழ்வை இந்த வைகுண்டநாதப் பெருமாள் அருள்வான் என்பது உட்பொருள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.