sai yoga centre

Showing posts with label விளக்கு பரிகார பூஜை. Show all posts
Showing posts with label விளக்கு பரிகார பூஜை. Show all posts

Friday, February 7, 2014

விளக்கு பரிகார பூஜை

எலுமிச்சை விளக்கு:

எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் திருமணத்தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என நம்புகின்றனர்.

குரு பரிகார விளக்கு:

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆலங்குடி குரு தலத்தில் குருபகவானுக்கு இருப்பது நான்கு அகல் விளக்குகளை ஏற்றி இருபத்து நான்கு முறை வலம் வந்து வழிபடுவது குருதோஷ பரிகாரமாக கருதப்படுகிறது.

சனீஸ்வர பகவான் பரிகார விளக்கு:

இரும்பு விளக்கில் நல்லெண்ணெயை ஊற்றி அதிலே கருப்புத் துணியால் மூட்டை போல் கட்டிய எள்ளை வைத்து அந்தத் துணியின் முனையையே திரியாக கொண்டு சனிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றி வழிபட சனி பகவானின் அருள் கிடைக்கும். இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்