sai yoga centre

Friday, April 7, 2017

கந்த் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன ?



கந்த் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன

சிவபெருமானே உருவாய் அமைந்த அருள்நிறை திருமுருகப் பெருமானின் தவ வடிவத்தைக் கண்டு மகிழ்ந்த அருட்செல்வர்
திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள், கந்தப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கந்தர்
கவசங்களை அருமையாகப் பாடி அருளியுள்ளார். அவற்றில் மிகவும் அருமையானது திருச்செந்தூர் மேவிய திருக்குமரன் கவசம்.

கவசம் என்றால் .. காப்பு, இரும்பால் செய்யப்பட்ட சட்டை, காவல் செய்யும் மந்திரம், உடம்புக்கூடு, காப்பை உண்டாக்கும் மந்திரம்
என்று சொல்லுவார்கள். அந்த முறையில் திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள் அருள்மிகு திருச்செந்திலாண்டவனான கந்தப் பெருமான் மீது பாடியுள்ள இந்தக் கவசம் இரும்புச் சட்டையைப்போன்று நம்மைக் காக்கும் காவல் மந்திரமாகும். அதனால்தான் அவர்
அருள்தரும் திருமுருகனை அழைத்து, மனித உடம்பின் உறுப்புகளை எல்லாம், "காக்க காக்க" என்று 39 முறைகள் சொல்லிப்
பாடியுள்ளார்.

கந்தர் சஷ்டிக் கவசத்தை ஆறுமுகப் பெருமான் திருமுன் அமர்ந்து நாள்தோறும் படிப்பது நல்லது. அதற்கு அவகாசம் இல்லாதோர்
செவ்வாய்க்கிழமை தோறும் படிப்பது நல்லது. அதற்கும் இயலாதவர்கள் கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலுமாவது படிப்பது நல்லது.
இதனைப் படிப்பதால் வம்சவிருத்தி, காரிய வெற்றி, நோய் நீக்கம், கிரக தோஷ நிவர்த்தி, அறிவு செல்வ வளர்ச்சி, திருமணம்
கைகூடுதல், பிள்ளைச் செல்வம் போன்ற நன்மைகள் ஏற்படும். அத்தோடு பேய் பிசாசு பயம் நீங்கும். பில்லி சூனியங்கள் அண்டாது.

"கந்தர் சஷ்டிக் கவசத்தை எப்படிப் பாடினால் பயன் கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு தேவராய சுவாமிகளே அவரது கவசப்பாடலின்
பிற்பகுதியில் சொல்லியுள்ளார். அதாவது தூய்மையான மனத்தோடும் உடலோடும், சந்தேகம் சிறிதுமில்லாத உண்மையான
நம்பிக்கையோடும், கந்தன் கருணையால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விடாமல் பாடிவருவோர்க்கு
கந்தனின் கருணை .. saispiritualcenter.orgஅருள் .. எளிதில் கிடைக்கும் என்று தேவராயரே தெளிவாக அவரது கவசப்பாடலின் 205ம் அடிமுதல் 210ம்
அடி வரையுள்ள 6 வரிகளில் குறிப்பிடுகிறார். அதில் வரும்" ஒருநாள் முப்பத்து ஆறு உருக்கொண்டு, ஓதியே செபித்து" என்னும்
ஒன்றறை வரியே ஒருசில இறையன்பர்கள் குறைகாணும் சந்தேகத்துக்கு உரியதாகும். "அப்படியானால் ஒரு நாளைக்கு 36 முறை
இந்தக் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாட வேண்டுமா? அப்படி பாடினால்தான் பலன் (அவனது அருள்) கிடைக்குமா?" என்பதே
அவர்களது சந்தேகம்.

இதுவரையில் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாடி பயன் பெற்றவர்கள் யாரும் அதை 36 முறைகள் ஓதியதாக (பாடியதாக)ச்
சொல்லவில்லை அல்லது தெரியவில்லை. அப்படி அன்றாடம் 36 முறைகள்* ஓதுவது இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில்
எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது. ஆகையால் எல்லாரும் 36 முறைகள் கந்தர் சஷ்டிக் கவசத்தை ஒவ்வொரு
நாளும் ஓத வேண்டும் என்பது கட்டாயமில்லை. இறையன்பர்கள் அப்படி 36 முறைகள் ஓத முடிந்தால் ஓதலாம். இல்லையேல் காலை,
மாலை இரு வேளைகளும் மனத்தூய்மையோடு கண் மாறாமல் மனம் சிதறாமால் மாமுருகனிடம் மனம் தோய்ந்து உருகியவாறு ஓதித்
திருநீறு அணிந்தால் போதும். எத்தனை முறை எந்தக் கவசத்தை ஓதினோம் என்பதைவிட எப்படி உண்மையான பக்தியோடு
ஓதினோம் என்பதே மிகவும் முக்கியம். இறைவன் கந்தன் நீங்கள் ஓதும் கவசப் பாடலை மட்டுமல்ல, உங்கள் பண்பையும், அவரிடம்
நீங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த உண்மையான பக்தியையும், உங்கள் மனதின் தூய்மையையும் கூடப் பார்த்துத்தான் அவன்
உங்களுக்கு அருள்புரிய வருவான் என்பதை நீங்கள் மனமார உணர வேண்டும்.

"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான். அதுபோல அவனிடம் போய் உண்மையான
அன்பு .. ஆழ்ந்த பக்திப்பெருக்கினால் .. உங்களைக் காத்து அருள்புரிய வேண்டி அழுதாலே போதும், அவன் உங்களைக் காக்க
ஓடிவருவான். உங்களிடம் தன்னலமில்லாத ஆழ்ந்த முருக தெய்வ பக்தி இருந்தால் நீங்கள் ஒருமுறை ஓதினாலும் ஓடி வருவான்,
கருணையின் கடலாகிய கருணா மூர்த்தி கந்தப் பெருமான். saispiritualcenter.org

வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப் பெருமான் திருமுன்பு அமர்ந்து இந்தக் கவசத்தைப் படிக்க வேண்டும். பிரமன், திருமால்,
சிவன், சரசுவதி, இலக்குமி, பார்வதி ஆகிய ஆறு சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக .. சக்திவேல் சண்முகனாக .. விளங்குவதால்,
ஆறுமுகத்துடன் கூடிய திருமுருகன் முன்பு உட்கார்ந்து ஒருமனதோடு இதைப் படிப்பது நல்லது. அதுவே சிறந்த பலனைக்
கொடுக்கக்கூடியது. செவ்வாய், வெள்ளி, சஷ்டி, பரணி (இரவு), கார்த்திகை (காலை), விசாகம் ஆகிய நாட்களில் இந்தக் கவசத்தைச்
சிறப்பாகப் படிக்கவேண்டும். கவச பாராயணத்துக்கு முன்னும் பின்னும், .. சரவணபவ .. என்னும் முருகப் பெருமானின் மூல
மந்திரத்தை .. ஓம் .. சேர்த்து "ஓம் சரவணபவ" என 108 முறைகள் ஓதவேண்டும். அதுதான் பலன்தர வழிசெய்யும்.

கவச பாராயணப் பாடலைக் குறையாகப் பாடக்கூடாது. அதை முழுமையாகப் பாடி முடிக்க வேண்டும். பாராயணத்தின் இடையில்
யாருடனும் பேசுதல் கூடாது. முன்பின் மாறிப் படித்தலாகாது. கவச பாராயணம் பாடி முடித்த பிறகு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி,
திருப்புகழ், பிள்ளைத் தமிழ், கந்தபுராணம் ஆகிய கந்தர் பஞ்ச புராணங்களிலிருந்து ஒவ்வொரு பாடல் வீதம் முறையே பாட வேண்டும்.
பாராயணம் முடிந்ததும் ஆறுமுகன் திருவுருவத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி ஓம் வடிவமாகக் காட்டி வணங்க வேண்டும். விரதமிருந்து
புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் சஷ்டியில் படிப்பதற்கு இந்தக் கவசமே மிகவும் சிறந்தது. இந்தக் கவசம் மேலே சொல்லப்பெற்ற
பலவித நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டு வரும் கற்பகம் ஆகும்.

நல்லெண்ணெய் விளக்கையே பூசை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும். கவசங்களைப் பிழையில்லாமல் நன்கு படிக்கப்
பழகிக்கொள்ளவேண்டும். மனத்திற்குள் படிப்பவர்கள் பாதிப் பலனைத்தான் பெறுவார்கள். நன்றாக வாய்விட்டு (இராகம் போடாமல்)
படிக்க வேண்டும். பாடலை மனனம் பண்ணி நூலைப் பாராமலே படிப்பது சிறப்பு. நூலுக்கு பூ வைத்து வணங்கி வழிபட்டுப் பின்பு
படிப்பது மிகவும் சிறப்பாகும்.

மந்திர சக்தி மிக்க கந்தர் சஷ்டிக் கவசத்தை மேலே சொன்ன முறைப்படி நாள்தோறும் பாராயணம் செய்யும் முருக பக்தர்களுக்கு
அவனது திருவருள் கிடைக்கும். பயன் நிச்சயம் உண்டு. நம்பினார் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு. கந்தன்
கைவிடமாட்டான். கட்டாயம் காத்தருள் புரிவான்.

கந்தன் கழலே சரணம் சரணம்.

(இதற்கான வேறு பொருள்:
மு = மூன்று; பத்து (பற்று) = அவையாவன - ஆணவம், கன்மம் (கர்மம்), மாயை; அரு = நீக்கு.
கருத்து - நாம் கந்த சஷ்டிக்கவசத்தை படிக்கும்போது, ஆசைகளையும் மும்மலங்களையும் நீக்கிவிட்டு தெளிந்த மனதுடன் இருக்கவேண்டும் என்பதே!)

கந்த் சஷ்டி கவசம்

கவசம்

குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன.........20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35 saispiritualcenter.org

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செகக ணசெககண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் காக்க
நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115 saispiritualcenter.org

கன புசைகொள்ளும் காளியோடனே வரும்
விட்டங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்
பாவைகளுடனும் பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130 saispiritualcenter.org

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும் செய்யான் புரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150

சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவணே சையொளி பவனெ
திரிபுர பவனெ திகழொளி பவனெ
பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ
அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை
பாடினே ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195 saispiritualcenter.org

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன் ஓருநினைவது வாகி
கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210 saispiritualcenter.org

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .
இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும்
என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...238

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.