sai yoga centre

Monday, December 19, 2011

கார்த்திகை மாதத்தில் வருகின்ற சோமவாரம் விரதம்

கார்த்திகை மாதத்தில் வருகின்ற சோமவாரம் விரதம் நம்முடைய பாரத நாடு தழுவிய விழாவாகும். பரஞ்சோதி முனிவரும் உத்தம விரதம் நம்முள் உத்தமம் திங்கள் நோன்பென்று உத்தம மறை நூலாதி உரைக்குச் சோமவாரம் என்று கூறியதைப் போல், செம்பாக்கம் உத்தர சம்புகேசுவரம், கண்ணுதல் கடவுளுக்கு உகந்த சோமவாரம் பெருமைப் பெற்ற திருத்தலம். சோமவார வழிபாட்டால் நம்முடைய ஆன்ம ஒளியை எழச் செய்கிறது. இதனால் உடல் தளர்வு, வறுமை, பகைமை நீங்கி நீண்ட காலம் முதுமையின்றி வாழ வழி செய்கிறது. மறுபிறவி வராவண்ணம் அருள்மிகு சம்புகேசுவரர் திருமூர்த்தம் காக்கிறது. இதுவே சோமவார விரதத்தின் அடிப்படை உண்மை. சோமவார தரிசனம் கோடி பாப விமோசனம். இறைபணி மன்றம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கார்த்திகை முதல் சோமவாரப் பெருவிழாவில் கலந்து கொண்டு வழிப்படுகிறவர்கள் மேற்குறிப்பிட்ட துன்பங்கள் நீங்கி இனிது வாழ்வர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.